Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் பரந்தாமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முன்னதாக விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் உள்ள 32 பள்ளிகளை சேர்ந்த1258 மாணவ கலந்து கொண்டனர், இதில் வெற்றி பெறும் மாணவர்கள் வரும் மாவட்ட அளவில்நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.